Wednesday 24 January 2018

நாட்பட்ட ஆஸ்துமாவை குணமாக்கும் குளியல் முறை



கீழே நான் கொடுத்திருக்கும் பதிவு டாக்டர் சக்தி ரஞ்சன் என்பவர் கொடுத்திருப்பது, இந்த பதிவை ஒரு நண்பர் படித்து விட்டு வாட்ஸ் ஆப் மூலம் பகிர, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ பேருக்கு இது உதவும் என நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன், டாக்டர் சக்தி ரஞ்சன் அவர்களின் பதிவு: 

பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .

அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. .52 வயது ஆண்.அவருக்கு ...என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம் விசாரித்தேன். பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று. அதற்கு அவர். அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார். இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். . அவரோ... "உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள். கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.

அதாவது ..  .அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..

1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.
2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி.
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு  உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு, ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும். இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு. 

பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது. ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். பழகப்பழக எளிமையாக பழக்கப்படும். இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது. நானும் நம்பிக்கையுடனும்,  வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்  தொடங்கினேன்.. ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது. சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது. தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை. எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன். தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக  வெளியே விட்டேன். ஆச்சரியம்  குளிக்கும் போது  மூக்கு வழி சுவாசம் எளிமையானது.. கடந்த ஆறு மாதமாக இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்.. தற்போது  எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை . இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது. இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது.. 

எனது புரிதல். .

நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன். நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் .. சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற  உண்மையை  உணர்த்த உதவுகிறது பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. சுருங்கும் அல்லது எதிர்வினை  தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ... தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது. 

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது. சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது.. ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.

நன்றி: வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழு
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------