Wednesday 31 January 2018

உலக வரலாற்றில் சில முதல் நிகழ்வுகள் - கண்டுபிடிப்புகள்

லக வரலாற்றில் முதல் கண்டுபிடிப்புகள், முதல் முறையாக நடந்த சில நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு கண்ணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் கோல்டன்  டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கோல்டன் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Wednesday 24 January 2018

நாட்பட்ட ஆஸ்துமாவை குணமாக்கும் குளியல் முறை



கீழே நான் கொடுத்திருக்கும் பதிவு டாக்டர் சக்தி ரஞ்சன் என்பவர் கொடுத்திருப்பது, இந்த பதிவை ஒரு நண்பர் படித்து விட்டு வாட்ஸ் ஆப் மூலம் பகிர, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ பேருக்கு இது உதவும் என நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன், டாக்டர் சக்தி ரஞ்சன் அவர்களின் பதிவு: 

பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .

அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. .52 வயது ஆண்.அவருக்கு ...என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம் விசாரித்தேன். பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று. அதற்கு அவர். அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார். இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். . அவரோ... "உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள். கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.

அதாவது ..  .அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..

1) அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி.
2) வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி.
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு  உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு, ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும். இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு. 

பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது. ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். பழகப்பழக எளிமையாக பழக்கப்படும். இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது. நானும் நம்பிக்கையுடனும்,  வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்  தொடங்கினேன்.. ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது. சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது. தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை. எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன். தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக  வெளியே விட்டேன். ஆச்சரியம்  குளிக்கும் போது  மூக்கு வழி சுவாசம் எளிமையானது.. கடந்த ஆறு மாதமாக இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்.. தற்போது  எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை . இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது. இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது.. 

எனது புரிதல். .

நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன். நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் .. சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற  உண்மையை  உணர்த்த உதவுகிறது பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. சுருங்கும் அல்லது எதிர்வினை  தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ... தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது. 

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது. சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது.. ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.

நன்றி: வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழு
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Monday 15 January 2018

மறைந்த ஞானி, மறையாத ஞானம்


மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், தொலைக்காட்சி விவாதங்களில் எதை குறித்தும் கவலைப்படாமல், யாருக்கும் அஞ்சாமல் தன் கருத்துக்களை முன் வைத்து பேசிய சிந்தனையாளர் என்று பல துறைகளில் தன்  பங்களிப்பை கொடுத்து வந்த பன்முகத்தன்மை கொண்ட ஞானியின் மறைவு தமிழ் சமுதாயத்துக்கு ஓர் பேரிழப்பு ஆகும்.  அறுபத்தி மூன்று வயது வரை வெகுஜன பத்திரிக்கைகளில் தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சியிலும், மேடைகளிலும் தன் பேச்சாலும் தமிழ் மக்கள் உள்ளங்களில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார், அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்களும், ஆற்றிய சிந்தனையை தூண்டும் எழுச்சி உரைகளும் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருக்கும். 

ஒரு விழா மேடையில் ஞானி அவர்களின்   சிந்தனையை தூண்டும் உரை

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------

Tuesday 9 January 2018

பழைய சாதம் அல்ல - நோய்கள் விரட்டும் அமிர்தம்



வீட்டில் இரவு நேரத்தில் சாதம் மீந்து விட்டால் தண்ணீர் விட்டு வைப்பார்கள், காலையில் அந்த பழைய சோற்றை அப்படியே நீராகாரமாக குடிப்பார்கள் அல்லது நீரை வடித்து விட்டு தயிர் அல்லது மோருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு. தொட்டு கொள்ள சிறிது வெங்காயம் பச்சை மிளகாய் போதும் கும்பா நிறைய பழைய சாதம் இருந்தாலும் சில நிமிடங்களில் மாயமாகி விடும். 

சிறு வயதில் பழைய சாதம் சாப்பிட்டு வளர்ந்த பலர் இன்று நகரங்களில் பீஸ்ஸாவும், பர்கரும்  சாப்பிடுவது தான் நாகரிகம் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை பழைய சாதத்தின் மகிமையை உலகம் அறிய செய்துள்ளது:  இரவில் சாதாரண சாதமாக (நூறு கிராம்) இருக்கும் போது 3.4 மில்லிகிராம் ஆக இருக்கும் இருக்கும் இரும்புச்சத்து ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தண்ணீரில் ஊறிய பின் காலையில்  73.91 மில்லிகிராம் ஆக மாறி விடுகிறது. (கிட்டத்தட்ட 2000 மடங்கு அதிகமாகிறது) அத்துடன் பொட்டாசியமும், எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியமும், கோடிக்கணக்கான உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது. மற்ற உணவுகளில் அதிகம் கிடைக்காத அரிதான வைட்டமின்களான வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 போன்ற வைட்டமின் சத்துக்களும் கிடைக்கிறது.     


*  உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.
*  ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க செய்து ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
*  உடல் சோர்வை போக்கி ஒரு நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சத்தை உடலுக்கு அளிக்கிறது.
*  உடலில் உள்ள செல்களில் அணுச் சிதைவுகள் ஏற்படுவதை தடுத்து, இதன் மூலம் விரைந்து மூப்படைவதை தடுத்து இளமையுடன் வைக்கிறது.
*  உடல் சூட்டை தணித்து இயல்பான நிலையில் வைக்கிறது.
*  வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை வெளியேற்றுவதுடன், செரிமான பிரச்சினைகளை தடுத்து வயிற்றில் வரும் அல்சர் போன்ற குடல் நோய்களை தடுக்கிறது.
*  உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகமான மன நிலையைத் தருகிறது.
*  உடலில் ஏற்படும் அலர்ஜி உட்பட பல விதமான தோல் நோய்கள் வருவதை தடுக்கிறது.

இவ்வளவு நன்மைகள் தரும் நம் பாரம்பரிய உணவாக விளங்கும் பழைய சாதத்தை நம் நாட்டிலேயே பலர் ஏழைகளின் உணவு என்றும், சிலர் பழைய சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்றும் ஒதுக்கி விடுகின்றனர், இனிமேலாவது வயிற்றை கெடுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து விட்டு பழைய சாதத்தின் பக்கம் பார்வையை திருப்பினால் உடல்நலமும் சீராகும், நோய்களால் வரும் மருத்துவ செலவுகளும் இருக்காது. 
--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
-------------------------------------------- சமூக ஊடகங்களில் பின் தொடர

Sunday 31 December 2017

ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிறந்த வரலாறு

ஷ்ய நாட்டில் ஒரு காலத்தில் மார்ச் முதல் தேதி புது வருட பிறப்பு நாளாக கொண்டாடப்பட்டு வந்தது பின்பு செப்டம்பர் முதல் தேதி புது வருட பிறப்பு நாளாக கொண்டாடப்பட்டது, 1699ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களால் ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டது, அன்று முதல் தொடர்ந்து முன்னூறு வருடங்களாக மிக பிரபலமான ஒரு விடுமுறை கொண்டாட்ட தினமாக ஜனவரி ஒன்றாம் தேதி இருந்து வந்தது ஆனால் 1927 ஆம் ஆண்டு  மதரீதியான கொண்டாட்டங்களுக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்ட தடையால் கிறிஸ்துமஸ் பண்டிகையோடு சேர்த்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் முடிவுக்கு வந்தது. 1935ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இரண்டாம் உலக போர் நடந்து வந்த காலத்திலும் கூட ரஷ்ய மக்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாட மறக்கவில்லை. 


1957 ஆம் ஆண்டு, டிசம்பர் 23ஆம் தேதி  இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பிய பின் ஜனவரி ஒன்றாம் தேதியை புத்தாண்டு விடுமுறை தினமாக அதிகாரபூர்வமாக ரஷ்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து இந்நாள் வரை ஜனவரி ஒன்றாம் தேதி ரஷ்யாவில்  புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 26 December 2017

இருதயம் காக்கும் வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!


உண்மையை அகிலமெங்கும் பரப்புவீர் ஆரோக்கியம் காப்பீர்

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது .   நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக் கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
கொழுப்பை குறைக்கும்
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ                        அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலி அன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாககுழந்தை யில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில ்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு தான் உண்டு. இந்த உண்மையை அகிலமெங்கும் பரப்புவீர் ஆரோக்கியம் காப்பீர்.
                                         நன்றி: ஹீலர் எஸ் பாலாஜி  - வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழு 

Tuesday 19 December 2017

ஞாபகங்கள் - ஜவ்வு மிட்டாய்


வ்வு மிட்டாய் அன்று அழைக்கப்படும் இந்த மிட்டாய்களை சிறு வயதில் சுவைக்காத குழந்தைகளே இருக்க முடியாது, இப்போது இந்த மிட்டாய் வகைகளை விற்பவர்களை பார்ப்பதே அரிதாய் போய்விட்டது, இந்த மிட்டாய் விற்பவர் தெருவில் வந்துவிட்டாலே சிறு பிள்ளைகளின் கூட்டம் மிட்டாய்காரரை சூழ்ந்து கொண்டு எனக்கு வாட்ச், எனக்கு கப்பல், எனக்கு பட்டம் என்று தங்களுக்கு பிடித்த பொருட்களை பிள்ளைகள் கேட்க கேட்க மிட்டாய்காரர் கொஞ்சமும் அசராமல் பிள்ளைகள் கேட்கும் பொருட்களை மிட்டாய் வடிவில் செய்து கொடுப்பார்...கீழே பகிர்ந்துள்ள காணொளி காட்சியில் மிட்டாய்காரர் வாட்ச், பைக், பறவை... என்று மிட்டாயில்  செய்து அசத்துகிறார்.. கண்டு மகிழுங்கள்...